search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் ரசிகர்கள்"

    • உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
    • கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹாட் ஸ்டார் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

    ஆசிய கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கிறது.

    இதனையடுத்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தயாராக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹாட் ஸ்டார் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை மொபைல் பயனார்கள் இலவசமாக பார்க்கலாம் என அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஐ.பி.எல் பேன் பார்க் நிகழ்ச்சி நடந்தது.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர்.

    புதுச்சேரி:

    ஐ.பி.எல் நிர்வாகம் பேன் பார்க் ஒன்றை அமைத்து கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க நாடு முழுவதும் 45 நகரங்களில் பிரம்மாண்ட திரைகள் மூலம் போட்டிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தது.

    புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஐ.பி.எல் பேன் பார்க் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    சென்னை அணி போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மைதானம் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பியது. இதனையடுத்து இரவு 8 மணிக்கு நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டது. இதனால் ரசிகர்கள் அங்கேயே நின்று கூச்சல் போட்டனர்.

    இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.
    • ஐதராபாத் ஜிம்கானா மைதானத்தில் காலை முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.

    ஐதராபாத்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டி நாக்பூரில் நாளை நடைபெறுகிறது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

    டிக்கெட்டுகளை வாங்குவதற்காக ஐதராபாத் ஜிம்கானா மைதானத்தில் காலை முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை ஒழுங்குபடுத்தினர். இதில் சில ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ×